போலி தகவல்களுடன் கூடிய அறிக்கை ; பொது மக்களுக்கு கல்வி அமைச்சு எச்சரிக்கை

110 0
அனைத்து பாடசாலைகள் மற்றும் மேலதிக வகுப்புக்கள் காதலர் தினமான இன்று வெள்ளிக்கிழமை (14) இரத்து செய்யப்பட்டுள்ளது என கல்வி அமைச்சு அறிவித்துள்ளதாக சமூக ஊடகங்களில் பரப்பப்படும் போலி தகவல்களுடன் கூடிய அறிக்கை குறித்து விழிப்புடன் இருக்குமாறு கல்வி அமைச்சு பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பில் கல்வி அமைச்சு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

இந்த போலி அறிக்கையில் கல்வி அமைச்சின் கடித மாதிரி அமைப்பு மற்றும் கல்வி அமைச்சின் செயலாளரின் கையொப்பம் இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.

குறித்த செய்தி தவறானது என தெரிவித்துள்ள கல்வி அமைச்சு, அதனை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதை தவிர்க்குமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.