கெக்கிராவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொரசகல்ல பகுதியில் பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் வெளிநாட்டு துப்பாக்கியுடன் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கைது நடவடிக்கை நேற்று சனிக்கிழமை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கொரசகல்ல, கெக்கிராவ பகுதியைச் சேர்ந்த 73 வயதுடையவராவார்.
மேலும், கைது செய்யப்பட்ட சந்தேகநபர் தொடர்பில் கெக்கிராவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

