வவுனியாவில் பெரும்போக நெல் அறுவடைக்கான பணிகள் நடைபெற்று வருவதாக கமநல அபிவிருத்தி உதவி ஆணையாளர் க.விமலரூபன் தெரிவித்தார்.
இம்முறை வவுனியா மாவட்டத்தில் 60,831 ஏக்கரில் பெரும்போக நெற் செய்கை மேற்கொள்ளப்பட்ட நிலையில், தற்போது வரை 11,490 ஏக்கர் அளவில் நெல் அறுவடை செய்யப்பட்டுள்ளது.
கடந்த வருட இறுதியிலும் இவ்வருட ஆரம்பத்திலும் நிலவிய சீரற்ற வானிலை காரணமாக 2547.5 ஏக்கர் விவசாய நிலங்களில் பயிரிடப்பட்ட நெற்பயிர்கள் அழிவடைந்தமை குறிப்பிடத்தக்கது.




