உப்புவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முருகபுர பிரதேசத்தில் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட 180 சிகரெட்டுகளை வைத்திருந்த சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
திருகோணமலை விசேட அதிரடிப்படை முகாமின் அதிகாரிகள் குழுவினால் கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போதே இவர் நேற்று சனிக்கிழமை (25) கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் திருகோணமலை பகுதியைச் சேர்ந்த 56 வயதுடையவர் ஆவார்.
கைதானவர் மேலதிக விசாரணைகளுக்காக உப்புவெளி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை உப்புவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

