சிலாபம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொழும்பு – புத்தளம் வீதியில் லுனு ஓயா பாலத்துக்கு அருகில், கார் மோதி பாதசாரி உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்விபத்து நேற்று சனிக்கிழமை (25) இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்தவர் சிலாபம் பகுதியைச் சேர்ந்த 33 வயதுடையவர் ஆவார்.
புத்தளத்திலிருந்து சிலாபம் நோக்கிச் சென்ற கார் ஒன்று வீதியை கடந்துகொண்டிருந்த பாதசாரி மீது மோதி, அதே திசையில் சென்ற மற்றொரு கார் மீதும் மோதியுள்ளது.
இந்த விபத்தில் உயிரிழந்தவரின் சடலம் சிலாபம் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
இதேவேளை இரு கார்களின் சாரதிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சிலாபம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

