இந்தியாவின் 76வது குடியரசு தினம், வெகு விமர்சையாக ஞாயிற்றுக்கிழமை (26) அனுஷ்டிக்கப்பட்டது. இதனையொட்டி யாழ்ப்பாணம் இந்திய துணைத் தூதரகத்தில் விசேட நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டன.
யாழ்ப்பாணம் மருதடி வீதியில் உள்ள யாழ்ப்பாணம் இந்திய துணைத் தூதரகத்தில், யாழ்ப்பாணம் இந்திய துணைத் தூதுவர் சாய் முரளி தலைமையில் நிகழ்வுகள் காலை 9 மணிக்கு ஆரம்பமானது. துணைத் தூதுவரால் இந்திய தேசிய கொடியும் ஏற்றி வைக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து குடியரசு தின வாழ்த்து செய்தி வாசிக்கப்பட்டது. இந்திய தேசபக்திப் பாடல்கள், நடனங்கள் கவிதைகள் என்பன ஆற்றப்பட்டன.

