கிரிபாவ பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கொக்மடுவ பகுதியில் 03 உள்நாட்டுத் துப்பாக்கிகளுடன் சந்தேக நபர் ஒருவர் நேற்று வெள்ளிக்கிழமை (24) கைது செய்யப்பட்டதாக கிரிபாவ பொலிஸார் தெரிவித்தனர்.
கிரிபாவ பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசிய தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் ஹன்கிலிகம தமுத்த பகுதியில் வசிக்கும் 69 வயதுடையவர் ஆவார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கிரிபாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

