வவுனியாவில் 128 கிலோ மாட்டிறைச்சியுடன் வாகனம் மடக்கி பிடிப்பு ; இருவர் கைது

95 0

வவுனியா, நெளுக்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 4ம் கட்டை பகுதியில் 128 கிலோ மாட்டிறைச்சியுடன் வாகனம் ஒன்றினை கைப்பற்றியுள்ளதுடன் இருவரை கைது செய்துள்ளதாக நெளுக்குளம் பொலிஸார் தெரிவித்தனர்.

நெளுக்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி  தலைமையிலான பொலிஸ் குழுவினர் நெளுக்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் திடீர் சோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்த போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதன் போது குறித்த பகுதியில் பயணித்த பட்டா ரக வாகனத்தினை சோதனைக்குட்படுத்திய போது கொள்கலன்களில் 128 கிலோ மாட்டிறைச்சியினை சட்டவிரோதமான முறையில் கொண்டு சென்றமை தெரியவந்துள்ளது.

இதனையடுத்து குறித்த வாகனத்தினை பொலிஸார் கைப்பற்றியதுடன், வாகனத்தின் சாரதி உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களிடம் முன்னெடுக்கப்பட்ட மேலதிக விசாரணைகளின் பின்னர் கைப்பற்றப்பட்ட 128 கிலோ மாட்டிறைச்சி உட்பட பட்டா ரக வாகனம் என்பவற்றுடன் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்துவதற்குரிய மேலதிக நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக நெளுக்குளம் பொலிஸார் தெரிவித்தனர்.