காலி, எல்பிட்டி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வல்லம்பகல பிரதேசத்தில் ஹெரோயின் போதைப்பொருள் மற்றும் ஆயுதங்களுடன் சந்தேக நபர் ஒருவர் நேற்று வியாழக்கிழமை (23) இரவு கைது செய்யப்பட்டுள்ளதாக எல்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.
எல்பிட்டி பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் எல்பிட்டி, தல்கஸ்பே பிரதேசத்தில் வசிக்கும் 29 வயதுடையவர் ஆவார்.
சந்தேக நபரிடமிருந்து உள்நாட்டு துப்பாக்கி, வாள், கத்தி மற்றும் 25 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருள் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை எல்பிட்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

