வவுனியாவில் புதிய ஜனநாயக மார்க்சிச லெனினிசக் கட்சியின் புரட்சிகர மேதின ஊர்வலம் (காணொளி)

337 0

புதிய ஜனநாயக மார்க்சீச லெனினிசக் கட்சியின் புரட்சிகர மேதின ஊர்வலம், கட்சியின் வன்னி மாவட்ட செயலாளர் பா.பிரதீபன் தலைமையில் வவுனியாவில் நடைபெற்றது.

வவுனியா தமிழ் மகாவித்தியாலயத்திற்கு முன்பாக ஆரம்பமாகிய மேதின ஊர்வலம் பசார் வீதி ஊடாக வவுனியா நகரசபை மண்டபத்தை அடைந்தது.

ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்கள் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும், நில மீட்பு போராட்டத்திற்காக தங்களது நிலங்களிற்காக போராடிக்கொண்டிருக்கின்ற மக்களின் நிலங்கள் அவர்களிடம் கையளிக்கப்பட வேண்டும், என பல கோரிக்கைகள் அடங்கிய பதாதைகளையும் ஏந்தியிருந்தனர்.

மே தின ஊர்வலத்தில் புதிய ஜனநாயக மாக்சிச லெனிசிச கட்சியின் பொதுச் செயலாளர் சி.கா.செந்திவேல், வடக்கு கிழக்கு புகையிரத காப்பாளர் ஒன்றிய தலைவர் எஸ்.ஜே.ரொஹான் ராஜ்குமார், சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பின் செயலாளர் எஸ்.டொன் பொஸ்கோ, மற்றும் பொது அமைப்புக்கள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.