வேலையற்ற பட்டதாரிகளுக்கு, இன்னமும் இரு வாரங்களில் தீர்வு பெற்றுத்தரப்படும்- இரா.சம்பந்தன்(காணொளி)

300 0

வேலையற்ற பட்டதாரிகளுக்கு, இன்னமும் இரு வாரங்களில் தீர்வு பெற்றுத்தரப்படும் என எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

இரண்டு வாரங்களுக்குள் சாதகமான முடிவினைப் பெற்றுத் தருவதாக, மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகளுக்கு எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் வாக்குறுதி வழங்கியுள்ளார்.

மட்டக்களப்பு அமெரிக்கன் மிஷன் மண்டபத்தில், மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகளுக்கும், எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தனுக்கும் இடையில் நேற்று மாலை சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது.

குறித்த சந்திப்பில் நாடாளுமன்ற உறுப்பினர் எம்;.ஏ.சுமந்திரன், நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா, கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் துரைராஜாசிங்கம் ஆகியோர் கலந்து கொண்டனர்.