பொகவந்தலாவை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போதே இவர்கள் நேற்று சனிக்கிழமை (18) கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 40 மற்றும் 48 வயதுக்கு இடைப்பட்ட பொகவந்தலாவை பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
சந்தேக நபர்களிடமிருந்து புதையல் அகழ்விற்கு பயன்படுத்தப்பட்ட உபகரணங்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொகவந்தலாவை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

