41 கிலோ மாட்டிறைச்சியுடன் இருவர் கைது

84 0

யாழ்ப்பாணத்தில் சட்டவிரோதமான முறையில் மாடொன்றை இறைச்சியாக்கி விற்பனை செய்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சாவகச்சேரி பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில், சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதுடன் இவர்களிடமிருந்து 41 கிலோ இறைச்சியையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

கைது செய்யப்பட்ட இருவரையும் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்துள்ள பொலிஸார் இறைச்சியாக்கப்பட்ட மாடு களவாடப்பட்டதா என்பது தொடர்பிலும் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.