பஸ் – மோட்டார் சைக்கிள் விபத்தில் பாடசாலை மாணவர்கள் இருவர் பலி!

110 0

நொச்சியாகம பகுதியில் 16ஆம் திகதி வியாழக்கிழமை பிற்பகல் மோட்டார் சைக்கிள் ஒன்று பஸ்ஸூடன் மோதிய விபத்தில் பாடசாலை மாணவர்கள் இருவர் உயிரிழந்துள்ளனர்.

நொச்சியாகமயில் இருந்து கண்டி நோக்கி பயணித்த தனியார் பஸ்ஸொன்றுடன் குறித்த மாணவர்கள் சென்ற மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்த இரண்டு பாடசாலை மாணவர்களும் 16 வயதுடையவர்கள் என்று காலதிவுல்வெவ பொலிஸார் தெரிவித்தனர்.