கிண்ணியாவில் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது!

112 0
கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பூவரசன்தீவு பகுதியில் கேரள கஞ்சா வைத்திருந்த சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸ் விசேட அதிரடிப்படையின் கந்தளே முகாமின் அதிகாரிகள் குழுவுக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போதே இவர் நேற்று சனிக்கிழமை (11) கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட நபர் கிண்ணியா பிரதேசத்தை சேர்ந்த 68 வயதுடையவர் ஆவார்.

சந்தேக நபரிடமிருந்து 187 கிராம் 650 மில்லி கிராம் கேரள கஞ்சா பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

இதனையடுத்து கைதானவர் மேலதிக விசாரணைகளுக்காக கிண்ணியா பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கிண்ணியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.