’தூய்மையான இலங்கை’’யில் பொலிஸார் அதிரடி

92 0

“தூய்மையான இலங்கை” திட்டத்திற்கு அமைவாக, விபத்துகளைக் குறைத்தல் மற்றும் நெரிசலைக் குறைக்கும் நோக்கில் இலங்கை பொலிஸ் திணைக்களம் இரண்டு போக்குவரத்து முயற்சிகளை ஆரம்பித்துள்ளது.

மாற்றப்பட்ட ஹோன் ஒலிகள், பல்வேறு வண்ணங்களின் ஒளிரும் விளக்குகள், சட்ட விரோதமான மாற்றங்கள், உரத்த ஹார்ன்கள், சத்தமில்லாத சைலன்சர்கள் மற்றும் விபத்து அபாயத்தை அதிகரிக்கும் கூடுதல் பாகங்கள் கொண்ட வாகனங்களை குறிவைத்து முதலாவது நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.

பொதுப் போக்குவரத்து பேருந்து ஓட்டுநர்களால் போக்குவரத்து விதிமீறல்களைக் கண்டறிந்து அதற்கேற்ப சட்டத்தை அமுல்படுத்துவதற்கு சிவில் உடையில் அதிகாரிகளை நியமிப்பது இரண்டாவது முயற்சிக்குள் அடங்கும் என்றும் பொலிஸ் ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.

சாரதிகள் மற்றும் பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கைகள் ஜனவரி 4 முதல் 19 வரை ஒரு முன்னோடித் திட்டமாக நடத்தப்படும் என்றும் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.