இது தொடர்பில் ரொய்ட்டர் செய்திச்சேவை மேலும் தெரிவித்துள்ளதாவது

முன்னாள் அமெரிக்க இராணுவீரரானநபர் ஒருவர் ஐஎஸ்; அமைப்பின் கொடியுடன் தனது வாகனத்தை மிக வேகமாக செலுத்தி தற்காலிக வீதிதடைகளை கடந்து வந்து புதுவருடத்தன்று பொதுமக்கள் மீது மோதினார் என தெரிவித்துள்ள அதிகாரிகள் இவர் ஏனையவர்களின் உதவியுடனேயே செயற்பட்டிருக்கவேண்டும் என தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபர் அமெரிக்காவின் டெக்ஸாஸை சேர்ந்த 42 வயது சம்சுட் டின் ஜபார் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.இவர் தனது வாகனத்தினால் பொதுமக்களை தாக்கியதை தொடர்ந்து இவர் மீது நடத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் உயிரிழந்தார்.
இரண்டு பொலிஸார் உட்பட 30 பேர் காயமடைந்துள்ளனர், பொலிஸார் மீது சந்தேகநபர் துப்பாக்கி பிரயோகத்தினை மேற்கொண்டுள்ளார்.

இசைநிகழ்வுகள் மதுபானசாலைகளிற்கு பிரபலமான சுற்றுலாப்பயணிகள் அதிகம் காணப்படும் இப்பகுதியில் புதுவருட கொண்டாட்டங்கள் இடம்பெற்றுக்கொண்டிருந்தவேளை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இவருடன் இணைந்து செயற்பட்டவர்களை கைதுசெய்யப்போவதாக அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் உறுதியளித்துள்ளனர்

