கட்டுநாயக்க விமான நிலையத்தில் “குஷ்” போதைப்பொருளுடன் சந்தேகநபர் கைது!

83 0

விமான நிலைய சுங்க அதிகாரிகள் குழுவினரால் சுமார்  04 கோடியே  38  இலட்சத்து  80 ஆயிரம் ரூபாய் பெறுமதியுடைய  “குஷ்” போதைப்பொருளுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து இன்று செவ்வாய்க்கிழமை (24) ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கைதுசெய்யப்பட்டனர் கொழும்பில் வசிக்கும் 30 வயதுடைய முச்சக்கரவண்டி சாரதியாவார்.

சந்தேகநபரின் பயணப்பையிலிருந்து  04 கிலோ  கிராம்  388 கிராம் “குஷ்” போதைப்பொருள்  05 பொதிகளாக தயார் செய்யப்பட்ட நிலையில் விமான நிலைய சுங்க அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.

இன்றையதினம்  காலை 11 மணியளவில் தாய்லாந்தின் பாங்கொக்கில் இருந்து ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானமானத்தில்  கட்டுநாயக்க விமான நிலையத்தை குறித்த நபர் வந்தடைந்துள்ளார்.

சந்தேகநபர் மற்றும் அவர் கொண்டு வந்த “குஷ்” போதைப்பொருளும் மேலதிக விசாரணைகளுக்காக கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.