அவுஸ்ரேலியாவைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் ஊடாக காலி உனவட்டுன பிரதேசத்தில் வறுமை கோட்டின் கீழ் வாழும் 50 ற்கும் மேற்பட்ட வறிய குடும்பங்களுக்கு கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி இன்று செவ்வாய்க்கிழமை (24) இலவசமாக அரிசி பொதிகள் பகிர்ந்தளிக்கப்பட்டன.
இதனை ஏற்பாடு செய்த காலி உனவட்டுன பிரதேசத்தைச் சேர்ந்த நிஹால் அவுஸ்ரேலியாவைச் சேர்ந்த சுற்றுலா பயணிகளுடன் அரிசி பொதிகளை பயனாளிகளுக்கு வழங்கினார்.



