
முல்லைத்தீவு தீர்த்தக்கடற்கரை பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (22) மர்மபொதி ஒன்று இருந்துள்ளது. இதனால் குறித்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதனையடுத்து மீனவர்கள் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் குறித்த மர்ம பாெதியினை எடுத்து சோதனை நடாத்தியதில் அதில் 14.7 கிலோகிராம் கோடெக்ஸ் எனும் வெடிபொருள் இருந்துள்ளது.
இதனையடுத்து குறித்த இடத்தில் இருந்து மீட்டு முல்லைத்தீவு பொலிஸார் வெடிபொருளை கொண்டு சென்றுள்ளனர். குறித்த சம்பவம் தாெடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

