குருணாகலில் மின்சார வேலியில் சிக்கி இளைஞன் உயிரிழப்பு

97 0

குருணாகல், மெல்சிறிபுர பொலிஸ் பிரிவுக்கு  உட்பட்ட தித்தெனிய பிரதேசத்தில் உள்ள காணி ஒன்றில் மின்சார வேலியில் சிக்கி இளைஞன் ஒருவன் உயிரிழந்துள்ளதாக மெல்சிறிபுர பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (15) காலை இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்தவர் குருணாகல், மெல்சிறிபுர பிரதேசத்தைச் சேர்ந்த 29 வயதுடைய இளைஞன் ஆவார்.

இந்த இளைஞன் மெல்சிறிபுர – தித்தெனிய பிரதேசத்தில் உள்ள காணி ஒன்றில் சட்டவிரோதமாகப் பொருத்தப்பட்டிருந்த மின்சார வேலியில் சிக்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மெல்சிறிபுர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.