விபத்தில் சிக்கியவர் பலத்த காயங்களுக்குள்ளாகி நுவரெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் சிறிசமங்கம, அம்பேவெல பிரதேசத்தைச் சேர்ந்த 55 வயதுடைய பண்ணைப் பரிசோதகர் ஆவார்.
சடலம் நுவரெலியா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
இவ்விபத்து தொடர்பில் உழவு இயந்திர சாரதி கைது செய்யப்பட்டார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளில் பட்டிபொல பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.

