விலங்குகளை ஏற்றுமதி செய்வதற்கான நடவடிக்கைகள்

87 0

தமது நிலங்களை பாதுகாப்பதற்காக, அவுஸ்திரேலிய அரசாங்கம் மில்லியன் கணக்கான கங்காருக்களை, அண்மையில் கொன்றிருப்பதாக விவசாயத்துறை முன்னாள் அமைச்சர் மஹிந்த அமரவீர (Mahinda Amaraweera) தெரிவித்துள்ளார்.

எனினும், இலங்கையில் இவ்வாறான நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு வெளியிடப்படுவதால், பயிர்களுக்கு குறிப்பிடத்தக்க சேதத்தை ஏற்படுத்தும் தீங்கு விளைவிக்கும் விலங்குகளை ஏற்றுமதி செய்வதற்கான நடவடிக்கைகளை, அரசாங்கம் பரிசீலிக்கலாம் என்று மஹிந்த அமரவீர பரிந்துரைத்துள்ளார்.