இந்தியா – ரஷ்யா இடையேயான நட்புறவு மிக உயர்ந்த மலையை விட உயர்ந்தது மற்றும் ஆழமான கடலை விட ஆழமானது என்று இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தெரிவித்தார்.
3 நாட்கள் அரசு முறை பயணமாக ராஜ்நாத்சிங், ரஷ்யா சென்றுள்ளார்.
அங்கு அவர் தலைநகர் மொஸ்கோவில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற இந்தியா – ரஷ்யா இராணுவ தொழில்நுட்ப ஒத்துழைப்புக்ன 21ஆவது கூட்டத்தில் கலந்து கொண்டார்.
இந்தக் கூட்டத்துக்கு பின் ராஜ்நாத் சிங், ரஷ்ய ஜனாதிபதி புடினை நேரில் சந்தித்து பேசினார். அப்போது, அவர் புடினுக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் அன்பான வாழ்த்துகளை தெரிவித்தார்.
தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையேயான இராணுவ ஒத்துழைப்பு உட்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து இருவரும் தீவிரமாக ஆலோசனை நடத்தினர்.

