வற் வரியால் புத்தகத்துறை நெருக்கடியில்

95 0

புத்தக வெளியீட்டிற்கு விதிக்கப்பட்டுள்ள 18 சதவீத வற் வரியை விரைவில் நீக்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இலங்கை புத்தக வெளியீட்டாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பான யோசனையை அடுத்த வரவு செலவுத் திட்டத்திற்கு பரிந்துரைப்பதாக ஜனாதிபதி உறுதியளித்துள்ளதாக சங்கத்தின் செயலாளர் தினேஷ் குலதுங்க தெரிவித்தார்.

“புதிய அரசாங்கம் வந்து ஒரு சில வாரங்களே ஆகியுள்ளன, இந்த நேரத்தில் நாங்கள் கோரிக்கைகளை வென்றெடுக்கப் போவதில்லை.

மிகத் தெளிவாக கொழும்பு சர்வதேச புத்தகக் கண்காட்சிக்கு வந்த ஜனாதிபதி, அடுத்த வரவு செலவுத் திட்டத்தில் இது பற்றிப் பேசுவோம் என்றார்.

அடுத்த பட்ஜெட்டுக்கு நேரம் இருக்கிறது. எனவே நாமும் முன்கூட்டியே சொல்கிறோம். 60 மில்லியனுக்கும் அதிகமான ஆண்டு வருவாய் உள்ளவர்கள் VAT செலுத்த வேண்டும்.