அநுராதபுரம், இப்பலோகம பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வலவ்வேகம பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் 37 வயதுடைய நபர் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் பெண் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக இப்பலோகம பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த கொலை சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (08) மாலை இடம்பெற்றுள்ளது.
இது தொடர்பில் தெரியவருவதாவது,
கொலை செய்யப்பட்டவர் கடந்த சனிக்கிழமை (07) இரவு தனது வீட்டில் மேலும் இரண்டு நபர்களுடன் இணைந்து மதுபானம் அருந்திக் கொண்டிருந்துள்ளார்.
இதன்போது, சந்தேக நபர்களுக்கும் கொலை செய்யப்பட்டவருக்கும் இடையில் ஏற்பட்ட தகராறு காரணமாக இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளன.
இதனையடுத்து, இந்த கொலை சம்பவம் தொடர்பில் 39 வயதுடைய நபரும் 29 வயதுடைய பெண்ணும் சந்தேகத்தின் பேரில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை இப்பலோகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

