மலேசிய முதலீட்டாளர்களுக்கு ஜனாதிபதி அழைப்பு

235 0

இலங்கையின் முதலீடுகள் மற்றும் வர்த்தக செயற்பாடுகளை விரிவுபடுத்தக்கூடிய வாய்ப்புகளை ஆராய்வதற்காக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மலேசிய முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

மலேசியாவின் பிரபல எரிபொருள் நிறுவனத்தின் பிரதிநிதிகள் நேற்று ஜனாதிபதியை சந்தித்துள்ளனர்.

இதன்போதே ஜனாதிபதி இந்த அழைப்பை விடுத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் தற்போதைய அரசியல் உறுதிப்பாடு மற்றும் சமாதான சூழல் வெளிநாட்டு முதலீடுகளுக்கு பொருத்தமானது.

எனவே உலக அங்கீகாரம் பெற்ற நிறுவனங்கள் நாட்டில் முதலீடு செய்தால், அது இருநாடுகளுக்கும் இடையிலான வர்த்தக உறவுகளுக்கு பெரும் உந்து சக்தியாக அமையும் ஜனாதிபதி இதன்போது நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.