சிரேஷ்ட சட்டத்தரணிகள் 25 பேர் ஜனாதிபதி சட்த்தரணிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்

233 0

சிரேஷ்ட சட்டத்தரணிகள் 25 பேர் ஜனாதிபதி சட்த்தரணிகளாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இலங்கை ஜனநாய சோசலிசக் குடியரசு அரசியலமைப்பின் 33(2)(ஈ) பிரிவின் கீழ் மேன்மைதங்கிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்குள்ள அதிகாரத்துக்கமைய, சட்டத்தரணி தொழில்வாண்மையில் சிறப்பு பெற்றவர்கள் மற்றும் தொழில்வாண்மை செயற்பாடுகளில் நேர்மையாகவும் உன்னதமானவர்களுமான சட்டத்தரணிகள், ஜனாதிபதியினால் இவ்வாறு நியமிக்கப்பட்டுள்ளனர்.

அதற்கமைய தயா பல்பொல, ஆரிய பீ ரேக்காவ, அனுர பண்டார மெக்கவ, நிஸ்ஸங்க நாணயக்கார, நெவில் அபேரத்ன, டபிள்யு.கே.அனுஜ கௌசிக்க பிரேமரத்ன, ஏ.எல்.எம்.ஹிதாயத்துல்லா, சமந்த ரத்வத்த, விஜேரத்ன தர்மசேன, உபாலி சேனாரத்ன, பத்ம பண்டார, எஸ்.கே.மார்க் பீரிஸ், கருணாரத்ன ஹேரத், மகேந்ர சுவந்தரத்ன, ஏ.பீ.சீ.எம்.ஜயசேகர, மொகான் வீரக்கோன், பீ.ஆர்.எஸ்.பீ.சமரநாயக்க, உபுல் ஜயசூரிய, ஆனந்த விக்ரமசேகர, ஜே.சீ.வெலிஅமுண, எம்.ஏ.சுமந்திரன், விஜய நிரஞ்சன் பெரேரா, கருணாதேவகே விமலதாஸ, மொஹமட் நிசாம் காரியப்பர் மற்றும் விவேகாநந்தன் புவிதரன் ஆகியோர், ஜனாதிபதி சட்டத்தரணிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.