கூட்டமைப்பின் மேதின நிகழ்வுகள் வடக்கிலும் கிழக்கிலும்

226 0

தழிழ் தேசிய கூட்டமைப்பின் மேதின நிகழ்வுகள் இம்முறை வடமாகாணத்திலும்,கிழக்கு மாகாணத்திலும் நடாத்த தழிழ் தேசிய கூட்டமைப்பின் தலைமையகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

தழிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் தழிழரசுக்கட்சியின் தலைவருமாகிய சோ.மாவை சேனாதிராஜா இதனை தெரிவித்தார்.

இம்முறை மேதினம் வடமாகாணத்தின் கிளிநொச்சி மாவட்டத்திலும், கிழக்கு மாகாணத்தில் அம்பாறை மாவட்டத்திலும் நடாத்துவதற்கு தலைமையகம் முடிவு எடுத்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

இதன்போது அரசாங்கத்திற்கு எதிராக 05 அம்ச கோரிக்கை முன்னேடுக்கப்படயுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.