தமிழீழம் தழுவிய முழு கடையடைப்புப் போராட்டம் தொடங்கியது!

479 0

காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கக்கோரியும் இராணுவத்தினரால் அபகரிக்கப்பட்ட நிலங்களை விடுவிக்கக்கோரியும் முன்னெடுக்கப்பட்டுவருகின்ற போராட்டங்களுக்கு வலுச்சேர்க்கும் வகையிலான தமிழர் தாயகம் தழுவிய கடையடைப்புப் போராட்டம் வெற்றிகரமாக நடைபெற்றுவருகிறது.

காணாமல் ஆக்கப்பட்டோராலும் நிலங்களை இழந்த மக்களும் தமிழர் தாயகத்தில் பல்வேறு இடங்களில் இரண்டு மாதங்களைக் கடந்த நிலையிலும் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டுவருகின்றனர்.
இந்த நிலையில் தங்களுடைய போராட்டங்களுக்கு நீதி கிடைக்க வலியுறுத்தி கடையடைப்புப் போராட்டத்துக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் கோரிக்கை முன்வைத்தனர்.மக்கள் முன்வைத்த கோரிக்கையினைத் தொடர்ந்து பல்வேறு பொது அமைப்புக்களும் அரசியல் கட்சிகளும் ஆதரவு தெரிவித்தன.
இதன் தொடராக வடக்கு – கிழக்கு முழுமையாக கடையடைப்புப் போராட்டத்தில் குதித்துள்ளது. அரச செயலகங்கள் செயற்படுவதாக அறிவிக்கப்பட்ட போதிலும் அரச பணியாளர்கள் பணிகளுக்கு மிகக் குறைந்த அளவிலேயே சென்றிருப்பதாக தெரியவருகிறது. பேருந்து போக்குவரத்துக்கள் முற்றுமுழுதாக நிறுத்தப்பட்டு, தனியார் நிறுவனங்கள் அனைத்தும் செயலிழந்துள்ளன.