இந்திய அரசின் வருமான வரி அலுவலகத்தை இழுத்து மூடும் போராட்டம்.

251 0

தமிழக விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்றாத இந்திய மோடி அரசின் வருமான வரி அலுவலகம் முற்றுகை.
காவேரி தண்ணீர் கொடுக்க கசக்குதா?
தமிழனின் வரிப்பணம் மட்டும் இனிக்குதா?

தமிழகத்திலிருந்து இந்திய அரசு பெரும் வருமானவரியினை கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு தாரை வார்த்துவிட்டு , வறட்சியில் வாடும் விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் தர மறுப்பதை கண்டித்தும், காவிரியில் தண்ணீர் தர மறுப்பதை கண்டித்தும், உடனடியாக காவேரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டியும், தமிழக விவசாயிகளுக்கு ஆதரவாக தில்லி அரசுக்கு தமிழன் ஏன் வரி கொடுக்க வேண்டும் என்ற முழக்கத்துடன் 21.03.2017அன்று இந்திய அரசின் வருமான வரி அலுவலகத்தை இழுத்து மூடும் முற்றுகை போராட்டத்தை மே பதினேழு இயக்கம் நடத்தியது.

இதில் பங்கேற்ற இயக்கங்கள்,
தந்தை பெரியார் திராவிடர் கழகம்
திராவிடர் விடுதலை கழகம்
தமிழக மக்கள் முன்னணி
விடுதலை தமிழ் புலிகள் கட்சி
மக்கள் மன்றம்
டிசம்பர் 3 இயக்கம்
தமிழர் விடியல் கட்சி
தமிழ்வழிக் கல்வி இயக்கம்
மே 17 இயக்கம்.

காணொளி பதிவுகள்