பன்னீர்செல்வம் முதலமைச்சராக இனி வாய்ப்பே இல்லை என்று அன்வர் ராஜா எம்.பி தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதா மரணத்துக்கு பிறகு இரு அணிகளாக பிளவு பட்ட அதிமுகவில் மீண்டும் இணைப்பு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இரு அணிகளும் பேச்சுவார்த்தைக்கு குழு அமைத்து விரைவில் பேச்சுவார்த்தையில் ஈடுபடும் என்று செய்திகள் வெளிவந்தன.
இந்த நிலையில், ஓ பன்னீர்செல்வம் ஆதரவு அணியினர் இன்று கட்சியில் இருந்து சசிகலாவை நிரந்தரமாக நீக்க வேண்டும், ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை கமிஷனுக்கு மாநில அரசு பரிந்துரைக்க வேண்டும் போன்ற கடும் நிபந்தனைகளை முன்வைத்தனர். இதையடுத்து பேச்சுவார்த்தையில் தொடர்பான அடுத்தகட்ட நகர்வுகளில் தேக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், அதிமுக அம்மா அணியில் உள்ள அன்வர் ராஜா எம்.பி , பன்னீர் செல்வம் முதல் அமைச்சராக வாய்ப்பே இல்லை என்று தெரிவித்துள்ளார். மேலும், 122 எம்.எல்.ஏக்களின் ஆதரவுடன் பழனிசாமி முதலமைச்சராக இருக்கும் போது புதிய முதலமைச்சர் பற்றிய பேச்சுக்கே இடமில்லை” என்றார்.