முல்லைத்தீவு மாவட்ட செயலகத்துக்கு முன்னால் அமைக்கப்பட்டுள்ள பண்டாரவன்னியன் சிலை… (காணொளி)

285 0

முல்லைத்தீவு மாவட்ட செயலகத்துக்கு முன்னால் அமைக்கப்பட்டுள்ள பண்டாரவன்னியன் சிலையை, வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் நேற்று திறந்து வைத்தார்.;.

முல்லைத்தீவு மாவட்ட மாகாண சபை உறுப்பினர் து.ரவிகரனின் கோரிக்கைக்கு அமைய, வடக்கு மாகாண கலை, பண்பாட்டு அலுவல்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் பண்டாரவன்னியன் உருவச்சிலை நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

ஆங்கிலேயர் ஆட்சியில் அவர்களால் பயன்படுத்தப்பட்ட பீரங்கி மீட்கப்பட்ட இடத்திலிருந்து, நேர் எதிரே உள்ள இடத்தில் பண்டாரவன்னியன் சிலை அமைக்கப்பட்டுள்ளது.

சிலை திறப்பு நிகழ்வில் வடக்கு மாகாண கல்வி அமைச்சர் த.குருகுலராசா, பாராளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன்  வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள், முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் ரூபாவதி கேதீஸ்வரன், மாகாண கல்வி அமைச்சின் மேலதிக செயலாளர், உட்பட பலர் கலந்துகொண்டனர்.