வவுனியா கொக்குவெளி பகுதியில் உள்ள பாதுகாப்பற்ற புகையிரத கடவையில் ரயிலுடன் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற கடுகதி ரயில் நேற்று மதியம் 12.30 மணியளவில் வவுனியா கொக்குவெளி பகுதியில் சென்று கொன்டிருந்த போது பாதுகாப்பற்ற ரயில் கடவையினை கடக்க முற்பட்ட மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்திற்குள்ளானது.
விபத்தின் நடைபெற்ற இடத்தில் இருந்து ஒரு கிலோ மீற்றர் தூரத்திற்கு மோட்டார் சைக்கிளும் மோட்டார் சைக்கிளில் பயணித்தவரும் இழுத்துச்செல்லப்பட்டதுடன் மற்றையவர் மோட்டார் சைக்கிளில் இருந்து குதித்து உயிர் தப்பியுள்ளார்.
ந.ஜீவன் என்பவரே இவ்விபத்தில் உயிரிழந்துள்ளார்.

