இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
மன்னாரில் இதுவரை 228 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இத்தொகை கடந்த 2023ஆம் ஆண்டை விடவும் இந்த ஆண்டு சிறிதளவு அதிகரித்துள்ளது.
வழமையாக ஒக்டோபர் மாதத் தொடக்கத்திலேயே மன்னாரில் டெங்கு அபாயம் ஏற்படும். ஆனால், இவ்வருடத்தில் சற்று நேரத்துடனே டெங்கு அபாயம் பரவக்கூடிய வாய்ப்பு அதிகரித்துள்ளது. ஆகவே, பொதுமக்கள் அனைவரும் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும்.
நீடித்த காய்ச்சல், கண்ணுக்குப் பின்னால் வலி போன்ற நோய் அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக வைத்தியரிடம் ஆலோசனைகளைப் பெற்று இரத்தப் பரிசோதனைகளை செய்துகொள்ள வேண்டும்.
இது தொடர்பாக அரச வைத்தியசாலையை நாடுவது மிகவும் சிறந்தது.
தற்பொழுது டெங்கு நோய் காணப்படும் இடங்களாக நானாட்டான் பிரதேச செயலகப் பிரிவில் உள்ள வங்காலையும், மன்னார் நகர பிரதேச செயலகப் பிரிவில் உள்ள சாவக்கட்டும் இனங்காணப்பட்டுள்ளது என்றார்.

