கொழும்பு, ஒருகொடவத்தையில் ஐஸ் போதைப்பொருளுடன் இருவர் கைது

122 0

கொழும்பு, கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஒருகொடவத்தை பகுதியில் போதைப்பொருட்களுடன் இரண்டு சந்தேக நபர்கள் நேற்று (14) கொழும்பு பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொழும்பு பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஒருகொடவத்தை பகுதியில் வசிக்கும் 35 மற்றும் 53 வயதுடைய இருவரே கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில், ஒருவரிடமிருந்து 150 கிராம் 600 மில்லிகிராம் ஐஸ் போதைபொருளும் மற்றையவரிடமிருந்து 12 கிராம் 720 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் 98,700 ரூபா பணம் என்பனவும் கைப்பற்றப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை கொழும்பு பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.