மேல் கொத்மலை நீர்தேக்கத்திலிருந்து இளைஞனின் சடலம் மீட்பு !

128 0

மேல் கொத்மலை நீர்தேக்கத்திலிருந்து இளைஞனின் சடலம் ஒன்று இன்று புதன்கிழமை (14) மீட்கப்பட்டுள்ளதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

சடலமாக மீட்கப்பட்ட இளைஞன் நேற்று முன்தினம் (12)  காணாமல் போயுள்ளார்.

குறித்த நபரை தேடும் நடவடிக்கையில் உறவினர்கள் ஈடுப்பட்ட போதும் அவர் தொடர்பில் எந்த தகவலும் கிடைக்க வில்லை.

அதன் பிறகு நேற்று செவ்வாய்க்கிழமை  (13) தலவாக்கலை பொலிஸ் நிலையத்தில் முறைபாடு செய்திருந்தனர்.

இந்நிலையிலேயே குறித்த இளைஞன் இன்று  (14) சடலமாக மேல் கொத்மலை நீர்தேக்கத்தில் மிதந்த நிலையில் காணப்பட்டதை  இப்பிரதேசவாசிகள் கண்டு தலவாக்கலை பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

அதனையடுத்து, பொலிஸாரால் சடலமாக மீட்கப்பட்ட இளைஞன் தலவாக்கலை மேற்பிரிவு தோட்டப்பகுதியைச் சேர்ந்த 24 வயதுடையவர் என  அடையாளம் காணப்பட்டுள்ளதாக  தெரியவந்துள்ளது.

குறித்த சடலம் சட்ட வைத்திய அதிகாரியின் பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.