அம்பாறை , உஹன பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட திஸ்ஸபுர பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக உஹன பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்து நேற்று (11) ஞாயிற்றுக்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது.
மோட்டார் சைக்கிள் ஒன்று வீதியில் பயணித்த உழவு இயந்திரத்தை முன்னோக்கிச் செல்ல முயன்ற போது வீதியிலிருந்த நாய் ஒன்றின் மீது மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தின் போது, மோட்டார் சைக்கிள் செலுத்துனரும் பின்புறத்தில் அமர்ந்திருந்த பெண்ணொருவரும் படுகாயமடைந்துள்ள நிலையில் அம்பாறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அம்பாறை, திஸ்ஸபுர பிரதேசத்தைச் சேர்ந்த 50 வயதுடைய பெண்ணொருவரே உயிரிழந்துள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை உஹன பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

