இந்த கத்தி குத்து சம்பவத்தில் மேலும் 09 சிறுவர்கள் காயமடைந்துள்ளதுடன், அவர்களில் 06 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் மேலும் இரு பெரியவர்களின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் அந்த நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
சிறுவர்களின் கலை நிகழ்ச்சி ஒன்றிலேயே இந்த கத்தி குத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்த கத்திகுத்தை மேற்கொண்ட 17 வயதான நபரொருவர் பொலிஸாரால் கைது செய்துள்ளனர்.
எதற்காக இந்த கத்தி குத்து நடத்தப்பட்டது என்பது இதுவரை தெரியவில்லை என்பதுடன், இது தீவிரவாத தாக்குதல் கிடையாது என அந்த நாட்டு பாதுகாப்பு பிரிவு அறிவித்துள்ளது.

