இந்நிகழ்விற்கு பிரதம விருந்தினராக யுனெஸ்கோவின் தலைமை பணிப்பாளர் நாயகம் கலந்து கொண்டார்.
இதன்போது, மகாவன்சத்தை உலக மரபுரிமைச் சின்னமாக பிரகடனப்படுத்துவதற்கான சான்றிதழ் யுனெஸ்கோ பணிப்பாளர் நாயகத்தினால் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் வேந்தர் பேராசிரியர் ஜி.எச்.பீரிஸிடம் கையளிக்கப்பட்டது.
யுனெஸ்கோவின் தலைமை பணிப்பாளர் நாயகம் பல்கலைக்கழகத்திற்கு விஜயம் செய்ததைக் குறிக்கும் வகையில் பிரதிவேந்தர் பேராசிரியர் எம்.டி.லமவன்ச நினைவுச் சின்னம் ஒன்றை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் பல்கலைக்கழக நூலகர் முனைவர் மு.மகேஸ்வரன் கலந்து கொண்டார்.
இலங்கையின் பெளத்த வரலாற்றைக் கூறும் நூல் என அறியப்படும் மகாவம்சம் கி.மு.6 ஆம் நூற்றாண்டில் மகாநாம தேரர் என்ற பெளத்த பிக்குவால் பாளி மொழியில் எழுதப்பட்டதாகும்.
உலக பாரம்பரிய இடங்கள், ஆவணங்களுக்கு அங்கீகாரம் வழங்கும் ஐக்கிய நாடுகள் சபையின் அறிவியல் மற்றும் பண்பாட்டு அமைப்பான யுனஸ்கோவானது, மகாவம்சத்தை உலக நினைவக ஆவணங்கள் பட்டியலில் மகாவம்சத்தையும் இணைத்துள்ளது.

