காலியில் இருந்து மாத்தறை நோக்கி பயணித்த ரயில் மோதி 28 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் இஹலமுல்லவத்த பகுதியைச் சேர்ந்த ஆண் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
காலி துறைமுக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொட்டுகொட ரயில் மார்க்கத்தில் நுழைவாயிலுக்கு அருகில் நேற்று வியாழக்கிழமை (18) மாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

