தமிழரசு கட்சியின் தலைவர் தெரிவிற்கு விரைவில் தேர்தல்

101 0

தனது தலைவர் பதவியை கூட தியாகம் செய்து அனைத்து தெரிவுகளையும் யாப்பு விதியின்படி மூலக்கிளைகளிலிருந்து தெரிவு செய்வதில் தான் உறுதியாக இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அத்துடன், நாளை மறுதினம் திருகோணமலை மாவட்டத்தில் வருகின்ற வழக்கு ஆட்சேபனைகளை இணைக்கின்ற மறுமொழிகான நாளாக அமையும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், காலம் தாழ்த்தாத வகையில் ஜனநாயகத்தை பாதுகாக்கும் வகையிலான ஜனாதிபதி தேர்தலை உடனடியாக அறிவிக்க வேண்டும் என்பதையே மக்கள் விரும்புவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் தெரிவித்துள்ளார்.