சட்டவிரோதமாக மாணிக்கக் கல் அகழ்வு பணியில் ஈடுபட்ட மூவர் கைது

129 0

நுவரெலியாவில் நோர்வுட் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் அனுமதிப்பத்திரம் இன்றி சட்டவிரோதமான முறையில் மாணிக்கக் கல் அகழ்வு பணியில் ஈடுபட்ட மூன்று சந்தேக நபர்கள் நேற்று (10) கைது செய்யப்பட்டுள்ளதாக நோர்வுட் பொலிஸார் தெரிவித்தனர்.

நோர்வுட் பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பலாங்கொடை, திக்ஓயா மற்றும் நோர்வுட் ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 23 மற்றும் 47 வயதுடைய மூவரே கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்களிடமிருந்து மாணிக்கக் கல் அகழ்வு பணிக்கு பயன்படுத்தப்படும் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை நோர்வுட் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.