சிட்னியின் மேற்கில் வீடொன்றில் ஏற்பட்ட தீவிபத்தில் மூன்று சிறுவர்கள் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பிட்ட சம்பவம் தொடர்பில் தந்தையை கைதுசெய்துள்ள காவல்துறையினர் இது குடும்பவன்முறைச்சம்பவமாக இது இருக்கலாம் என தெரிவித்துள்ளனர்.
லாலோர் பார்க்கில் உள்ள பூங்காவிற்கு அவசர சேவை பிரிவினர் அழைக்கப்பட்டனர் அவர்கள் அங்கு சென்றவேளை வீடு முற்றாக தீப்பிடித்து எரிந்துகொண்டிருந்தது என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இரண்டு மற்றும் நான்கு வயது சிறுவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளனர்.
பத்து மாத பெண் குழந்தையின் உடல் தீ அணைக்கப்பட்ட பின்னர் மீட்கப்பட்டது என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
ஒன்பது வயது சிறுமியையும் மூன்று சிறுவர்களையும் அவர்களின் தாயாரையும் மருத்துவனையில் அனுமதித்துள்ளோம் என தெரிவித்துள்ள காவல்துறையினர் தீயில் சிக்குண்டவர்களை காப்பாற்றுவதை தடுக்க முயன்ற 29 வயது நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார் என தெரிவித்துள்ளனர்.
அவர் அந்த பிள்ளைகளின் தந்தை என காவல்துறையினர் உறுதி செய்துள்ளனர்.

