திருகோணமலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை (16) இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவசரமாக சென்று யாத்திரை கடமைகளையும் நேர்த்திக்கடன்களையும் நிறைவேற்ற முடியாது என்றும் பக்தர்களின் வருகையை இது குறைக்கும் செயலாகிறது என்றும் குற்றஞ்சாட்டினார்.
அவர் மேலும் கூறுகையில்,
பண்டைய காலம் தொடக்கம் மரபு ரீதியாக இந்த யாத்திரை நடைபெறுகிறது. நேர்த்திக்கடனுக்காக சிறுவர்கள் முதல் பெரியோர், கர்ப்பிணித் தாய்மார்கள் என உகந்தை முதல் கதிர்காமம் வரை பாத யாத்திரை மேற்கொள்வது வழக்கம். ஆனால், தற்போது அடுத்த மாதம் 2ஆம் திகதி வரை பிற்போட்டிருப்பதும் குறுகிய காலத்தில் செல்லவைப்பதும் யாத்திரிகர்களை தடுக்கும் செயலாக காணப்படுகிறது.
சிங்களவர்கள், தமிழர்கள் என பலரும் கதிர்காம யாத்திரை மேற்கொள்வது வழக்கம். இது ஈழத்து சைவர்களின் வாழ்வியலில் ஒன்றாக காணப்படுகிறது.
நடந்து சென்று நேர்த்திக்கடனை செலுத்துவது தொன்றுதொட்டு நடந்து வருகிறது. இதில், கடினமான பாதை வழியே காடுகள் ஊடாக செல்ல வேண்டும்.
இந்த மாதம் 30ஆம் திகதி திறக்கப்படவிருந்த பாதையின் திறப்பு நாள் பிற்போடப்பட்டுள்ளது. நான்கு நாட்களுக்குள் பாத யாத்திரையை நிறைவேற்றுவது கடினம்.
இதனால் பல்லாயிரக்கணக்கான பாத யாத்திரை குழுக்கள் தங்களது கண்டனத்தை தெரிவித்து வருகிறார்கள். வழமை போன்று இந்த பாத யாத்திரை நடைபெற வேண்டும். எனவே, உரிய அரச தரப்பினர் இது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும் என்றார்.

