வவுனியா தலைமைப் பொலிஸ் நிலைய போதை ஒழிப்பு பிரிவு பொறுப்பதிகாரி றிஸ்வி தலைமையிலான பொலிசார் வவுனியா, தோணிக்கல் பகுதியில் மேற்கொண்ட விசேட நடவடிக்கையின் போது விற்பனைக்காக தயார்ப்படுத்தி வைக்கப்பட்டிருந்த 5 கிராம் ஹெரோயின் போதைப் பொருளை மீட்டனர்.
இதன்போது குறித்த ஹெரோயின் போதைப் பொருளை உடமையில் வைத்திருந்த வவுனியா, தோணிக்கல் பகுதியைச் சேர்ந்த யுவதியும் கைது செய்யப்பட்டுள்ளார். மேலதிக விசாரணைகளின் பின் கைது செய்யப்பட்ட யுவதியை நீதிமன்றில் முற்படுத்தவுள்ளதாக பொலிசார் மேலும் தெரிவித்தனர்.

