பெல்மடுல்ல – போபிட்டிய பிரதேசத்தில் சுவர் இடிந்து வீழ்ந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர் .
விபத்தில் படுகாயமடைந்த நபர் பெல்மடுல்ல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் போபிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்தவர். மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

