கொழும்பிலிருந்து காத்தான்குடிக்கு பொருட்களை ஏற்றிச் சென்ற லொறி தீப்பற்றியது !

54 0

கொழும்பில் இருந்து காத்தான்குடிக்கு பொருட்களை ஏற்றிச் சென்ற லொறி ஒன்று வாழைச்சேனை நாவலடி பகுதியில் திடீரென தீப்பற்றி எரிந்து சேதமடைந்துள்ளது.

இந்த சம்பவம் இன்று புதன்கிழமை (15) அதிகாலை இடம்பெற்றுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர் .

கொழும்பில் பொருட்களை ஏற்றிக்கொண்டு காத்தான்குடியை நோக்கி சென்ற லொறியே இவ்வாறு தீ பற்றியது .

லொறியில் எடுத்துச் சென்ற பொருட்கள் எரிந்து சேதமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர் .