மனித பாவனைக்குத் தகுதியற்ற ஒரு இலட்சத்து எழுபதாயிரம் கிலோ அரிசி மீட்பு

49 0

மனித பாவனைக்குத் தகுதியற்ற ஒரு இலட்சத்து எழுபதாயிரம் கிலோகிராம் அரிசி நுகர்வோர் விவகார அதிகாரசபை அதிகாரிகளால் மீட்கபட்டுள்ளது.

நுகர்வோர் அதிகாரசபையின் அனுராதபுரம் பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கு அமைய நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை முன்னெடுக்கப்பட்ட  சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போதே அரிசி கைப்பற்றப்பட்டது

அரிசியின் பொதிகளில் எழுதப்பட்ட திகதி கடந்த 30ஆம் திகதி காலாவதியாகியிருந்த நிலையில் காலாவதித் திகதி அடுத்த 30 நாட்களுக்கு செல்லுபடியாகும் வகையில் மாற்றியமைக்கப்பட்டது.

அத்துடன் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கான இலவச அரிசி வழங்கும் திட்டத்திற்கு இந்த அரிசியை அரசாங்கத்திற்கு வழங்க திட்டமிட்டுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் அரிசி ஆலையின் உரிமையாளர்  பொலிஸாரால் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.