பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நீதி கிடைப்பதை தடுப்பதாக சம்பந்தன் மீது குற்றச்சாட்டு

208 0
பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நீதி கிடைப்பதை தடுத்து அரசாங்கத்தை பாதுகாக்கும் முயற்சியில் எதிர்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் ஈடுபட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
யாழ்ப்பாண ஊடக அமையத்தில் நேற்று ஊடகவியலாளர்களை சந்தித்து கலந்துரையாடும்போதே அவர் இதனை குறிப்பிட்டார்.
ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானம், பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நீதியை பெற்று கொடுப்பதற்காக கொண்டுவரப்பட்ட ஒரு தீர்மானம் அல்ல.
அது அமெரிக்கா மற்றும் மேற்குலக நாடுகள் தமக்கு சாதகமான ஒரு அரசாங்கத்தை இலங்கையில் ஆட்சிக்கு கொண்டுவருவதற்கான தீர்மானமேயாகும் எனவும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குறிப்பிட்டார்.